வேளாண் அலுவலர்களுக்கு புள்ளியியல் துறை பயிற்சி

திருக்கோவிலுார்: விழுப்புரம் மாவட்ட, பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை சார்பில், வேளாண்துறை அலுவலர்களுக்கு, பொதுப்பயிர் மதிப்பிட்டாய்வு திட்ட களப்பணி பயிற்சி, அரகண்டநல்லுார், அடுத்த புலிக்கல் கிராமத்தில் நடந்தது.

துணை இயக்குனர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். திருக்கோவிலுார் கோட்ட புள்ளியல் உதவி இயக்குனர் செல்வராஜ் பயிற்சியை துவக்கி வைத்தார். முகையூர் வட்டார துணை வேளாண் அலுவலர் பாஸ்கர் முன்னிலை வகித்தார்.

உளுந்துார்பேட்டை வட்டார புள்ளியல் ஆய்வாளர் சிவதாஸ் பங்கேற்று ஜி.சி.இ.எஸ்., செயலியில் பயிர் அறுவடை ஆய்வு தரவுகளை பதிவேற்றம் செய்வது குறித்து வேளாண் அலுவலர்களுக்கு செயல் விளக்க பயிற்சி அளித்தார்.

முகையூர் வட்டார புள்ளியல் அலுவலர் கிரிஜா, திருக்கோவிலுார் தலைமையிட புள்ளியல் ஆய்வாளர் சுமித்ரா, திருநாவலுார் வட்டார புள்ளியல் ஆய்வாளர் மதுராம்பிகை, திருவெண்ணைநல்லுார் வட்டார புள்ளியல் ஆய்வாளர் குப்புராஜ் உள்ளிட்ட புள்ளியல் துறை, வேளாண் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

திருநாவலுார் வேளாண் அலுவலர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

Advertisement