பிரதமர் மோடி உபயம் வழங்கிய காளி கீரிடம் மாயம்

8


டாக்கா: வங்கதேசத்தில் பிரதமர் மோடி உபயமாக வழங்கிய காளி கீரிடம் மாயமானது குறித்து கோயில் நிர்வாகத்தினர் தேடி வருகின்றனர்.

கடந்த 2021 மார்ச் மாதம் பிரதமர் மோடி வங்கதேசம் சென்றிருந்தார். இந்நேரத்தில் சத்கிராவில் ஜேஜோரேஸ்வரி காளி அம்மன் கோயில் உள்ளது. இங்கு தரிசனம் செய்த பிரதமர் மோடி காளிக்கு வெள்ளியால் செய்யப்பட்ட, தங்கத்தால் முலாம் பூசப்பட்ட கிரீடம் ஒன்றை அம்மனுக்கு வழங்கினார்.

நேற்று இந்த கோயிலில் தூய்மை பணியில் ஈடுபட்ட போது கிரீடம் காணாமல் போனது தெரிய வந்தது. இது குறித்து கோயில் நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில் கண்காணிப்பு காமிரா உதவியுடன் கிரீடம் தேடப்பட்டு வருகிறது.

Advertisement