கனமழையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னேற்பாடுகள் செய்யுங்க; மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு

சென்னை: மிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது. கடிதத்தில் தமிழக அரசு கூறியிருப்பதாவது: கனமழையால் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாதவாறு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.



* பேரிடர்களை கையாள்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.


* போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதோடு இயந்திரங்களை தயார்நிலையில் வைக்க வேண்டும்.


* மாவட்ட அளவில் அனைத்துத் துறைகளும் இணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement