காஷ்மீரில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஒமர் அப்துல்லா

ஸ்ரீநகர்:: காஷ்மீரில் ஆட்சி அமைக்க உரிமை கோரி துணை நிலை கவர்னரை சந்தித்தார் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா.




90 இடங்கள் கொண்ட காஷ்மீர் சட்டசபைக்கு நடந்த தேர்தலில், கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும் வெற்றி பெற்றது. தேசிய மாநாட்டு கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், உமர் அப்துல்லா, எம்.எல்.ஏ.,க்கள் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் 4 பேர் ஆதரவு கொடுத்து உள்ளனர். இதனால் அக்கட்சியின் பலம் 46 ஆக அதிகரித்து உள்ளது.

நேற்று துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹாவை சந்தித்தார் ஒமர் அப்துல்லா. அப்போது தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதம் வழங்கி ஆட்சி அமைக்க உரிமைகோரினார்.

Advertisement