குன்றத்து கோயிலில் ஆயுத பூஜை
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயுத பூஜையை முன்னிட்டு, திருவிழா காலங்களில் சுவாமி புறப்பாடாகும் தங்கமயில், தங்க குதிரை, வெள்ளி பூதம், வெள்ளி ஆட்டுக்கிடாய், தங்க சப்பரம், அன்னம், சேஷம், வெள்ளி ரிஷபம், வெள்ளி யானை வாகனங்கள் மற்றும் கோயில் முன்பு நிலை நிறுத்தப்பட்டுள்ள பெரிய வைர தேருக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.
சூரசம்ஹார லீலைக்கு பயன்படுத்தப்படும் வாள், கேடயம், வேல், வில், அம்பு ஆகியவற்றை உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை முன்பு வைத்து பூஜை, தீபாராதனை நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement