சந்தேக கணவனை எரித்து கொன்ற மனைவி கைது

2

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், காவேட்டிப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன், 32; போர்வெல் மோட்டார் மெக்கானிக். இவரது மனைவி ஜோதி, 31. பத்து ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்த தம்பதிக்கு, 7, 5 வயதில் இரு மகன்கள் உள்ளனர். குடிப்பழக்கம் உள்ள முருகேசன், மனைவியை சந்தேகப்பட்டு துன்புறுத்தி வந்துள்ளார்.

நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்ற முருகேசன், குடிபோதையில் இரவில் வீடு திரும்பினார். அப்போது வழக்கம்போல் சந்தேகப்பட்டு ஜோதியை தாக்கியுள்ளார். இதில், அவர் மயங்கி விழவே, ஷோபாவில் படுத்த முருகேசன் அப்படியே துாங்கிவிட்டார்.

நள்ளிரவில் மயக்கம் தெளிந்து எழுந்த ஜோதி, முருகேசன் துாங்கிய ஷோபாவுக்கு தீ வைத்தார். இதில், ஷோபா எரிந்ததில் முருகேசன் உடல் கருகி பலியானார். நாமக்கல் போலீசார் ஜோதியை கைது செய்தனர்.

Advertisement