கைகளுக்கு எட்டும் உயரத்தில் மின் ஒயர்கள்

காலுார்:காஞ்சிபுரம் ஒன்றியம், காலுார் ஊராட்சி, பெரியநத்தம் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க விவசாய நிலங்கள் வாயிலாக மின்தட பாதைக்கான மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், விநாயகர் கோவில் தெரு ஒட்டியுள்ள விவசாய நிலம் வழியாக செல்லும் இரு மின்கம்பங்களுக்கு இடையே மின்ஒயர்கள் மிகவும் தாழ்வாக செல்கின்றன.

இதனால், டிராக்டர் வாயிலாக நிலத்தை உழவு செய்ய முடியாத சூழல் உள்ளது. அறுவடை இயந்திரம் வாயிலாக நெற்பயிர்களை அறுவடை செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

மேலும், விளைபொருட்களை லாரியில் ஏற்றிச் செல்ல முடியாத நிலை உள்ளதால் எங்களின் வாழ்வாதாரமே பாதிக்கும் சூழல் உள்ளது என, இப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, பெரியநத்தம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் தாழ்வாக செல்லும் மின் ஒயர்களை சீரமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement