ரூ.4.5 கோடி 'ஹெராயின்' அசாமில் சிக்கியது
குவஹாத்தி: அசாமில், வாகன சோதனையில் 4.5 கோடி ரூபாய் மதிப்பிலான 'ஹெராயின்' போதைப் பொருளை, போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலமான அசாமில், கரீம்கஞ்ச் மாவட்டத்தின் செவாலி பீல் பகுதி வழியாக போதைப்பொருள் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அண்டை மாநிலமான மிசோரமில் இருந்து அவ்வழியாக வந்த வாகனத்தை மடக்கி போலீசார் சோதனையிட்டனர்.
அந்த வாகனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 548.82 கிராம் எடையிலான ஹெராயின் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.
இதன் சர்வதேச மதிப்பு 4.5 கோடி ரூபாய் என தெரிய வந்துள்ளது. போதைப் பொருளை கடத்திய நான்கு பேரை கைது செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement