கல்லுாரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லுாரி மாணவனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம் காவேரியம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மீன்ராஜ். இவரது இளைய மகன் அகிலந்து 20, கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் 3ம் ஆண்டு படித்தார். இவர் 5 நாட்களுக்கு முன் நண்பர்களுடன் டூவீலரில் செல்லும் போது விபத்தில் சிக்கினார்.
அங்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அகிலந்து, மூளைச்சாவு அடைந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் விருப்பம் தெரிவித்ததன் பேரில் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement