என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு சீருடை வழங்கல்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு சீருடை வழங்கும் விழா நடந்தது.

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் என்.எஸ்.எஸ்., சிறப்பு திட்ட முகாம் கடந்த வாரம் முழுதும் நடத்தப்பட்டது.

முகாமில் என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை, முதலுதவி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

பள்ளி என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் ராமச்சந்திரன், வீரமுத்து ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

நிறைவு நாளான நேற்று முகாமில் பங்கேற்ற மாணவர்கள் 15 பேர்களுக்கும் கள்ளக்குறிச்சிபள்ளி உடற்கல்வி இயக்குநர் வீரமுத்து மற்றும் கள்ளக்குறிச்சி நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து இலவச சீருடைகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் கலாபன் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் பாலசுப்ரமணியன், பழனிவேல், நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை முன்னாள் தலைவர்கள் தனசேகரன், குமரேசன், நிர்வாகிகள் பெருமாள், ரங்கராஜன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement