மகளிர் ஜூனியர் டி20 உலகக் கோப்பை; இந்தியா சாம்பியன்
கோலாலம்பூர்: மகளிர் 19 வயதுக்குட்பட்டோர் டி 20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. உலகக் கோப்பையை தொடர்ந்து 2வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது.
மலேசியாவில், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 2வது சீசன் நடக்கிறது. இன்று கோலாலம்பூரில் பைனல் நடந்தது. இன்று (பிப்.,02) நடந்த பைனலில் இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா மோதியது. இந்தியா, தொடர்ந்து 2வது முறையாக பைனலுக்குள் நுழைந்தது. முதலில் பேட்டிங் செய்த, தென் ஆப்ரிக்க அணி 20 ஓவர்களில் 82 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்திய வீராங்கனை கோங்கடி திரிஷா அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து பேட் செய்த இந்திய மகளிர் அணி, ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 83 ரன்கள் என்ற இலக்கை 11.2 ஓவர்களில் எட்டி சாம்பியன் பட்டம் வென்றது.
19 வயதுக்குட்பட்டோர் மகளிர் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையை தொடர்ந்து 2வது முறையாக இந்தியா வென்றுள்ளது. திரிஷா கொங்கடி 44 ரன்னும், சால்கே ஜோடி 26 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
வாசகர் கருத்து (1)
Shankar - Hawally,இந்தியா
02 பிப்,2025 - 15:10 Report Abuse
வாழ்த்துக்கள்.
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement