பனிப்பொழிவால் மக்கள் அவதி

கரூர்: கரூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை காலம் முடிவடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக அதிகாலை நேரத்தில், கடும் பனிப்-பொழிவு நிலவுவதால், மக்கள் அவதிப்படுகின்-றனர். அக்டோபர் முதல் டிசம்பர் வரை, 3 மாதம் வடகிழக்கு பருவமழை காலமாகும். கரூர் மாவட்-டத்தில் குறைவான அளவே மழை பெய்தது. இந்-நிலையில், கடந்தாண்டைவிட, தற்போது வழக்-கத்தைவிட அதிகாலை நேரத்தில் அதிகளவு பனிப்பொழிவு இருந்து வருகிறது.


ஜன., மாதம் முடிந்தவுடன் பனி பொழிவு குறையும். ஆனால், அதிகாலை, 4:00 முதல், 8:00 மணி வரை பனி தாக்கம் அதிகரித்துள்ளது. இதன்-காரணமாக பள்ளி மாணவ, மாணவியர், முதியோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரூர் புறநகர்ப்-பகுதிகளில் சாலையை மறைக்கும் வகையில் பனிப்பொழிவு இருந்து வருகிறது. வாகன ஓட்டி-களும் சாலையை கடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

Advertisement