கரூரில் விற்பனைக்கு வந்த வெள்ளரிக்காய்
கரூர்: ஒவ்வொரு ஆண்டும், மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை, கோடைக்காலமாகும். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்ற நிலையில், வெயிலின் தாக்கம் படிப்படியாக அதி-கரித்து வருகிறது. குறிப்பாக, தை மாதம் நிறைவு பெற உள்ள நிலையில், கரூர் மாவட்டத்தில் பல்-வேறு பகுதிகளில், அதிகாலையில் கடும் பனிப்-பொழிவும், மதியம் வெயிலின் தாக்கம் அதிகரிக்-கவும் தொடங்கியுள்ளது.
கோடைக்காலங்களில், உடலுக்கு ஏற்படும் சூட்டை குறைக்கும் வகையில், வெள்ளரிக்காய், தர்ப்பூசணி, நீர்மோர் ஆகியவற்றை பொதுமக்கள் விரும்பி சாப்பிடுவது உண்டு. இந்நிலையில், கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்கெட், திருச்சி மற்றும் கோவை சாலைகளில், வெள்ள-ரிக்காய் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல், சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து, கரூர் பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ள வெள்ளரிக்காய், கிலோ, 60 ரூபாய் முதல், 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.