மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்


மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்


கிருஷ்ணகிரி :தேன்கனிக்கோட்டை தாலுகா தண்டரை வி.ஏ.ஓ., சரவணன் மற்றும் அதிகாரிகள், தண்டரை பஸ் ஸ்டாப் அருகில் ரோந்து சென்றனர். அங்கிருந்த லாரியை சோதனையிட்டதில், 2 யூனிட் மணல் கடத்த முயன்றது தெரிந்தது. புகார் படி, தேன்கனிக்கோட்டை போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
அஞ்செட்டி வி.ஏ.ஓ., நளாயினி மற்றும் அதிகாரிகள் அஞ்செட்டி பஸ் ஸ்டாப் அருகில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்ற லாரியை சோதனையிட்டதில் ஒன்றரை யூனிட் மணல் கடத்த முயன்றது தெரிந்தது. நளாயினி புகார் படி, அஞ்செட்டி போலீசார் லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.

Advertisement