அரவக்குறிச்சியில்கடும் பனிப்பொழிவு


அரவக்குறிச்சியில்கடும் பனிப்பொழிவு


அரவக்குறிச்சி, :அரவக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த ஒரு மாதமாக கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. நேற்று அதிகாலை முதல், காலை 8:00 மணி வரை பனிமூட்டம் காணப்பட்டதால், எதிரே வரும் வாகனங்கள் தெளிவாக தெரியவில்லை. மேலும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் சென்றன. பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் பனிமூட்டத்தால் சற்று சிரமப்பட்டு சென்றனர்.

Advertisement