மோசமான தார் சாலைமக்கள் அவஸ்தை
மோசமான தார் சாலைமக்கள் அவஸ்தை
கிருஷ்ணராயபுரம்: சரவணபுரம் பகுதியில் இருந்து, அய்யர்மலை வரை செல்லும் சாலை மோசமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, சரவணபுரம் பகுதியில் இருந்து அய்யர்மலை வரை தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக, அய்யர்மலை கோவிலுக்கு வழிபாடு செய்வதற்காக வாகனங்களில் செல்கின்றனர். தற்போது சாலையின் பல இடங்களில் கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமாக காணப்படுகிறது. இதனால் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் செல்லும்போது, சில வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் சேதம் ஏற்பட்டுள்ள தார் சாலையை புதுப்பிக்க, கிருஷ்ணராயபுரம் யூனியன் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'ஸ்ட்ராபெரி க்விக் மெத்' விற்பனை; பள்ளி, கல்லுாரிகள் அருகே 'ரெய்டு'
-
பந்தல் அமைக்கும் பணி அமைச்சர் பார்வை
-
சில்வர் பீச் சுற்றுலா தலமாக மாற்றப்படும்; அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்
-
கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் 1008 தாமரை பூக்கள் அர்ச்சனை
-
சட்ட விரோத அமெரிக்க குடியேற்றம் ஹரியானா ஏஜன்டுகள் மீது வழக்கு
-
வாரணாசி அன்னபூர்ணேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்; சிருங்கேரி சங்கராச்சாரியார் ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமி நடத்தினார்
Advertisement
Advertisement