மீனவர்கள் கைது லோக்சபாவில் தி.மு.க., கோஷம்

5

புதுடில்லி : லோக்சபாவில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து, தி.மு.க., - எம்.பி.,க்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

அப்போது தி.மு.க., - எம்.பி., கனிமொழி பேசுகையில், “தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் துன்புறுத்தப்பட்டு கைது செய்யப்படுகின்றனர்; 97க்கும் மேற்பட்டோர், அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

“மீன்பிடி படகுகளை இலங்கை பறிமுதல் செய்துள்ளதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதில், மத்திய அரசு தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும்,” என்றார்.

தொடர்ந்து, இந்த பிரச்னையை வலியுறுத்தி, பார்லி., வளாகத்தில், தி.மு.க., - எம்.பி.,க்கள் தலைமையில், 'இண்டி' கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தினர்.

Advertisement