தை வெள்ளியில் பத்மாவதி தாயாருக்கு சிறப்பு பூஜை

போடி: தை நான்காவது வெள்ளியை முன்னிட்டு போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பத்மாவதி தாயாருக்கு நைவேத்யம், சிறப்பு பூஜை, சிறப்பு அபிஷேகம் மற்றும் பஞ்சமுக தீபாராதனைகள் நடந்தது.

பக்தர்களுக்கு பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பத்மாவதி தாயாரின் தரிசனம் பெற்றனர்.

ஏற்பாடுகளை தக்கார் மாரிமுத்து, சுவாமி அலங்காரங்களை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார்.

Advertisement