டில்லி சட்டசபை தேர்தல்; பெரும்பான்மையை தாண்டி பா.ஜ., முன்னிலை

3

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று (பிப்.,08) காலை 8 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. தற்போது காலை 10 மணி நிலவரப்படி, பா.ஜ., 45 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

டில்லியில் 70 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 5ம் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. தேர்தலில் தேசிய அளவில் 'இண்டி' கூட்டணியில் இருந்தாலும், ஆம் ஆத்மியும், காங்கிரசும் தனித்து போட்டியிட்டன. முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ., 68 தொகுதிகளில் போட்டியிட்டது. அதன் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக்தந்திரிக் ஜன சக்தி கட்சிகள் தலா ஒரு தொகுதியில் போட்டியிட்டன.



இந்த தேர்தலில், 96 பெண்கள் உட்பட 699 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். மொத்தம் 60.42 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. இந்த ஓட்டுகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் துவங்கி நடந்து வருகிறது.

முன்னிலை நிலவரம்!



தற்போது, காலை10 மணிப்படி முன்னிலை நிலவரம் பின்வருமாறு;

மொத்தம் தொகுதிகள் - 70

பா.ஜ.,- 45

ஆம் ஆத்மி- 21

காங்கிரஸ்- 1

மற்றவை- 0

யார் அதிக தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பார்கள் என்று தேர்தல் முடிவுகள் மதியத்திற்குள் தெரியவரும்.

கடந்த தேர்தலில்...!



2015ல் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி பெரும் வெற்றியைப் பெற்றது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில், 67ல் வென்றது. 2020 தேர்தலில், 63 தொகுதிகளில் வென்று ஆத் ஆத்மி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

Advertisement