ஈரோடு இடைத்தேர்தல்; 10 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க., முன்னிலை

7


ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று (பிப்.,08) காலை 8 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. இரண்டாம் சுற்று முடிவில், தி.மு.க., வேட்பாளர் 11,140 ஓட்டுக்கள் பெற்று, முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் 1,081 ஓட்டுக்கள் பெற்றுள்ளார்.


ஈரோடு கிழக்கு தொகுதியில், காங்., கட்சியைச் சேர்ந்த இளங்கோவன் காலமானதால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க., பா.ஜ., தே.மு.தி.க., கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன. காங்., தொகுதியை பறித்து, வி.சி.சந்திரகுமாரை வேட்பாளராக தி.மு.க., நிறுத்தியது. நா.த.க., சார்பில் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சைகள் என, 46 பேர் போட்டியிட்டனர். பிப்ரவரி 5ம் தேதி, அமைதியான முறையில் ஓட்டுப் பதிவு நடந்து முடிந்தது.


மொத்தம் 72% ஓட்டுக்கள் பதிவாகின. தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. மொத்தம் 17 சுற்றுகளாக ஓட்டுக்கள் எண்ணப்பட உள்ளன. தற்போது, இரண்டாம் சுற்று முடிவில், தி.மு.க., வேட்பாளர் 11,140 ஓட்டுக்கள் பெற்று, முன்னிலையில் உள்ளார்.

முன்னிலை நிலவரம்!




சுற்று வாரியாக முன்னிலை நிலவரம் பின்வருமாறு:

முதல் சுற்று

தி.மு.க.,- 8,025 ஓட்டுக்கள்

நாம் தமிழர் கட்சி- 1,081 ஓட்டுக்கள்

இரண்டாம் சுற்று

தி.மு.க., - 11,140 ஓட்டுக்கள்

நாம் தமிழர்- 1,081 ஓட்டுக்கள்


அதிகமான ஓட்டுக்களை பெற்று வெற்றி பெறுவது யார்? என்பது மதியத்திற்குள் தெரியவரும்.

கடந்த தேர்தலில்...!



கடந்த 2023ம் ஆண்டு நடந்த இடைத் தேர்தலில் 74.79 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இளங்கோவன்- 1 லட்சத்து, 10,156 ஓட்டும், அ.தி.மு.க., தென்னரசு, 43,923 ஓட்டும் பெற்றனர். வெற்றி வித்தியாசம், 66,233 ஓட்டாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement