பஸ்சில் மூதாட்டி செயின் மாயம்

கோவை; ராமநாதபுரத்தை சேர்ந்தவர் வசந்தா, 75. இவர் குரும்பபாளையத்தில் இருந்து காந்திபுரம் செல்ல பஸ் ஏறினார். கூட்ட நெரிசலில் வசந்தாவின் செயின் அறுந்து பஸ்சுக்குள் விழுந்தது. வசந்தா எடுத்து, பேக்கில் வைத்தார். இறங்கிய பின், பேக்கை பார்த்த போது செயின் இல்லை. புகாரின்படி, சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement