காரைக்காலில் இன்று கந்துாரி விழா பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை

காரைக்கால்: காரைக்காலில் கந்தூரி விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ தர்காவில், ஷரீப் கந்தூரி விழா இன்று (8ம் தேதி) கொடி ஏற்றத்துடன் துவக்கிறது. இதனால் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வரும் 15ம் தேதி சனிக்கிழமை அனைத்து பள்ளி, கல்லுாரிகள் வழக்கம்போல் இயங்கும். மேலும் அரசு தேர்வுகள் மற்றும் ஜவஹர்லால் நவோதயா வித்யாலயா நுழைவு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Advertisement