டில்லி சட்டசபை தேர்தல்: பா.ஜ.,47ல் வெற்றி; 1ல் முன்னிலை

16

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மாலை 6:00 மணி நிலவரப்படி பா.ஜ., 47 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 1 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஆம் ஆத்மி 22ல் வெற்றி பெற்றுள்ளது.


டில்லியில் 70 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 5ம் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. தேர்தலில் தேசிய அளவில் 'இண்டியா' கூட்டணியில் இருந்தாலும், ஆம் ஆத்மியும், காங்கிரசும் தனித்து போட்டியிட்டன. முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ., 68 தொகுதிகளில் போட்டியிட்டது. அதன் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் தந்திரிக் ஜன சக்தி கட்சிகள் தலா ஒரு தொகுதியில் போட்டியிட்டன.


இந்த தேர்தலில், 96 பெண்கள் உட்பட 699 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். மொத்தம் 60.42 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. இந்த ஓட்டுகளை எண்ணும் பணி இன்று நடந்தது.

முன்னிலை நிலவரம்!



தற்போது, மாலை 6:30 மணிப்படி முன்னிலை நிலவரம்;

மொத்தம் தொகுதிகள் - 70

பா.ஜ.,- 48 ( 47 ல் வெற்றி, 1 ல் முன்னிலை)

ஆம் ஆத்மி- 22ல் வெற்றி

காங்கிரஸ்- 0

கடந்த தேர்தலில்...!



2015ல் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி பெரும் வெற்றியைப் பெற்றது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில், 67ல் வென்றது. 2020 தேர்தலில், 63 தொகுதிகளில் வென்று ஆத் ஆத்மி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.



கெஜ்ரிவால் வாழ்த்து


இது தொடர்பாக கெஜ்ரிவால் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது: மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். இந்த வெற்றிக்காக பா.ஜ.,வுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன். அவர்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில் கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் ஏராளமான பணிகளை செய்துள்ளோம். ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக மட்டும் செயல்படாமல், மக்களுடன் இருந்து அவர்களுக்காக பணியாற்றுவோம். இவ்வாறு அந்த வீடியோவில் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Advertisement