காட்டு யானை தாக்கி வயநாட்டில் இளைஞர் பலி
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3852903.jpg?width=1000&height=625)
வயநாடு: வயநாட்டில் காட்டு யானை தாக்கி இளைஞர் ஒருவர் பலியானார்.
கேரள மாநிலம் மேப்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அட்டமாலாவில் உள்ள மலைப்பகுதி பழங்குடியினர் குடியிருப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:
மேப்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அட்டமாலாவில் உள்ள பழங்குடியினர் குடியிருப்பை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 27, நேற்று இரவு மலைப்பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, அந்த வழியாக வந்த காட்டு யானை தாக்கி உள்ளது. அவரது உடல் இன்று கண்டெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அங்கு காவல்துறையினர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரள-தமிழ்நாடு எல்லையில் உள்ள நூல்புழா கிராமத்தில் உள்ள வனப்பகுதிக்குள் 45 வயது நபர் ஒருவர் காட்டு யானை தாக்கி கொல்லப்பட்ட ஒரு நாள் கழித்து இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
மேலும்
-
அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி; கட்டித் தழுவி வழியனுப்பிய பிரான்ஸ் அதிபர்
-
18-ல் ஒய்வு பெறும் ராஜிவ் குமார் : அடுத்த தலைமை தேர்தல் கமிஷனர் யார் ?
-
அதிகாரத்தில் நீடிக்க மாணவர்கள் மீது அடக்குமுறை: ஷேக் ஹசீனா மீது ஐ.நா., குற்றச்சாட்டு
-
2026ம் ஆண்டு இந்தியா - பிரான்ஸ் நாடுகளுக்கானதாக அமையும்; வெளியுறவுத்துறை
-
ஏக்நாத் ஷிண்டேவை புகழ்ந்த சரத்பவார்: உத்தவ் தாக்கரே கோபம்!
-
'பாக்.,கில் எனக்கு மரண தண்டனை அளிக்க முயற்சி': மார்க் ஜுக்கர்பெர்க் பகீர் தகவல்