27 லட்சம் 'சிம்' கார்டுகளை முடக்க முடிவு
பாட்னா, போலி சிம் கார்டுகளை பயன்படுத்தி அரங்கேற்றப்படும் மோசடிகளால், பொதுமக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதுடன், மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர்.
நாடு முழுதும் இதுபோன்ற மோசடி சம்பவங்கள் நடந்தாலும், பீஹாரில் இது அதிகமாக நடப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசின் விதிகளின்படி, ஒரு நபர் அதிகபட்சமாக ஒன்பது சிம் கார்டுகள் மட்டுமே அவரது பெயரில் வைத்து கொள்ள முடியும்.
சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனையில், பீஹாரில் ஆயிரக்கணக்கானோர் ஒன்பது சிம் கார்டுகளுக்கு மேல் உபயோகப்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் பல, மோசடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதாக அதிர்ச்சித் தகவல்களும் வெளியாகியுள்ளன.
இதைத் தொடர்ந்து, பயனர்களின் சிம் கார்டு எண்ணிக்கையை கட்டுப்படுத்த பீஹார் அரசு முடிவு செய்துள்ளது.
அடுத்த மூன்று மாதங்களில், அங்கு பயன்பாட்டில் உள்ள 27 லட்சம் சிம் கார்டுகளின் செயல்பாட்டை முடக்க மாநில தொலைதொடர்பு துறை திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய விதி குறித்து பயனர்களுக்கு தெரிவிக்கவும் தொலைத்தொடர்பு ஆப்பரேட்டர்கள் அறிவுறுத்தப்பட்டுஉள்ளனர்.
மேலும்
-
கொங்கல்நகரம் அகழாய்வு; 2ம் கட்ட பணிகள் துவக்கம்
-
உடுமலை அருகே ஸ்ட்ராபெரி பழங்கள் அறுவடை; கிலோ ரூ. 600க்கு விற்பனை
-
பிப்., 26ல் மத்திய அமைச்சர் அமித் ஷா ராமநாதபுரம் வருகை
-
வர்த்தக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை இருப்பது அவசியம்
-
திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேச நபருக்கு மும்பையில் சொந்த வீடு; விசாரணையில் போலீசார் அதிர்ச்சி
-
கணினி வழியில் பிளஸ் 2 தேர்வு; பார்வையற்ற மாணவருக்கு அனுமதி