ஆடு வளர்க்க பிப். 24ல் பயிற்சி முகாம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பயிற்சி ஆய்வு மையத்தில் பிப்.24ல் ஆடு வளர்ப்பு தொழில் முனைவோர் சிறப்பு பயிற்சி முகாம் நடக்கிறது. தேசிய கால்நடை இயக்கம் சார்பில் 50 சதவீத மானியத்தில் ஆடு வளர்ப்பு பண்ணை அமைப்போருக்கு பல்கலை சான்றிதழுடன் கூடிய இம்முகாமில் கால்நடை வளர்க்கும் விவசாயிகள், சுயதொழிலில் ஆர்வமுள்ள இளைஞர்கள், பெண்கள் பங்கேற்கலாம்.

விபரங்களை வேலை நாட்களில் 0452 - - 248 3903ல் அறியலாம். முன் பதிவு செய்தவர்கள் மட்டுமே பயிற்சியில் பங்கேற்க முடியும் என மைய தலைவர் டாக்டர் சிவசீலன் தெரிவித்தார்.

Advertisement