பள்ளி சிறுமிகளிடம் சில்மிஷம் : போக்சோவில் இருவர் கைது

உளுந்துார்பேட்டை:உளுந்துார்பேட்டை அருகே பள்ளி சிறுமிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டை அடுத்த கீழப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி, 57; இவர் சில தினங்களுக்கு முன் 5ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளார்.

இதேபோன்று, எலவனாசூர்கோட்டை அடுத்த சுந்தரவாண்டி பகுதியைச் சேர்ந்தவர் முகமது யாகூப், 58; இவர், 6ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளார்.

இது குறித்த இரு வேறு புகார்களின் பேரில் உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து தண்டபாணி, முகமதுயாகூப் ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement