பழுதடைந்த அரசு பஸ்களை சீரமைக்க கோரி வழக்கு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி
மதுரை: அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் மோசமான நிலையில் உள்ளவற்றை சீரமைக்க தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே அரசு பஸ்சின் பின்புற படிக்கட்டு உடைந்து விழுந்தது. பயணிகளுக்கு பாதிப்பு இல்லை. சரியான நிர்வாகமின்மை, பராமரிப்பின்மை, ஊழலால் போக்குவரத்துக் கழகம் இழப்பை சந்தித்துள்ளது. தரம் குறைந்த உதிரி பாகங்கள் கொள்முதல் மூலம் முறைகேடு நடக்கிறது. அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் மோசமான நிலையில் உள்ளவற்றை சீரமைத்து இயக்க தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது.
தமிழக அரசு தரப்பு: பல புதிய பஸ்கள் இயக்கப்படுகின்றன. பழுதடைந்த பஸ்களை படிப்படியாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மனுதாரர் மேம்போக்காக பொத்தாம் பொதுவான காரணங்களைக்கூறி மனு செய்துள்ளார்.
இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: மனுதாரர் குறிப்பிடும் புகாருக்கு போதிய ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.
மேலும்
-
சிவகாசி அருகே தீ பெட்டி ஆலையில் பயங்கர தீ; தொழிலாளிகள் உயிர் தப்பினர்!
-
தெலுங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து; தொழிலாளர்கள் 30 பேரை மீட்கும் பணி தீவிரம்
-
பாரதிதாசன் பல்கலை. பதவி உயர்வில் சமூக அநீதியை நீக்குங்கள்; அன்புமணி வலியுறுத்தல்
-
எந்த மொழிக்கும் நாம் எதிரி அல்ல; அப்பா செயலி வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
ஜி.எஸ்.டி., அதிகாரி, தாய், சகோதரி பலி; அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு
-
விமானத்தில் உடைந்த இருக்கை; மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கோரியது ஏர் இந்தியா