மாவோயிஸ்ட் கார்த்திக் சிக்கினார்
சென்னை:தேனி மாவட்டம் உத்தமபாளையம்அருகே உள்ள பண்ணைபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக், 41; மாவோயிஸ்ட். இவர், பெரியகுளம் அருகே, முருகமலைப்பகுதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு வனப்பகுதியில், சக மாவோயிஸ்டுகளுடன் ஆயுத பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.
இவரை, 10 ஆண்டுகளுக்கு முன், போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமினில் வெளிவந்த கார்த்திக், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். இவரை, கியூ பிரிவு மற்றும் மதுரை மற்றும் தேனி மாவட்ட போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் எழிலகம் அருகே கார்த்திக்கை, கியூ பிரிவு போலீசார் பிடித்தனர்; மதுரைக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிவகாசி அருகே தீ பெட்டி ஆலையில் பயங்கர தீ; தொழிலாளிகள் உயிர் தப்பினர்!
-
தெலுங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து; தொழிலாளர்கள் 30 பேரை மீட்கும் பணி தீவிரம்
-
பாரதிதாசன் பல்கலை. பதவி உயர்வில் சமூக அநீதியை நீக்குங்கள்; அன்புமணி வலியுறுத்தல்
-
எந்த மொழிக்கும் நாம் எதிரி அல்ல; அப்பா செயலி வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
ஜி.எஸ்.டி., அதிகாரி, தாய், சகோதரி பலி; அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு
-
விமானத்தில் உடைந்த இருக்கை; மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கோரியது ஏர் இந்தியா
Advertisement
Advertisement