100 நாள் வேலைக்கான சம்பளம் 3 மாதம் பாக்கியால் போராட்டம்
திருப்போரூர், பிப். 22--
நுாறு நாள் வேலை திட்டத்தை கிராமங்களில் முழுமையாக அமல்படுத்த கோரியும், தற்போது மூன்று மாதங்களாக நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க கோரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நேற்று, திருப்போரூர் பி.டி.ஓ., அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
இதில், கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் லிங்கன் தலைமை வகித்தார்.
முன்னதாக 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, திருப்போரூர் பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக புறப்பட்டனர். ஓ.எம்.ஆர்., செங்கல்பட்டு சாலை வழியாக, பி.டி.ஓ., அலுவலகம் வந்தடைந்து, காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர்.
அப்போது, 100 நாள் வேலைக்கான, மூன்று மாத நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக முழுமையாக வேலை வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
அங்கு வந்த ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி, வரும் வியாழன் முதல் 100 நாள் வேலை வழங்குவதாகவும், சம்பளம் பாக்கியை உடனே வழங்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தனர்.
இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
மேலும்
-
சிவகாசி அருகே தீ பெட்டி ஆலையில் பயங்கர தீ; தொழிலாளிகள் உயிர் தப்பினர்!
-
தெலுங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து; தொழிலாளர்கள் 30 பேரை மீட்கும் பணி தீவிரம்
-
பாரதிதாசன் பல்கலை. பதவி உயர்வில் சமூக அநீதியை நீக்குங்கள்; அன்புமணி வலியுறுத்தல்
-
எந்த மொழிக்கும் நாம் எதிரி அல்ல; அப்பா செயலி வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
ஜி.எஸ்.டி., அதிகாரி, தாய், சகோதரி பலி; அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு
-
விமானத்தில் உடைந்த இருக்கை; மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கோரியது ஏர் இந்தியா