ரூ.3.84 கோடி மோசடி முன்னாள் பேராசிரியர் கைது

சென்னை:பொறியாளரை, 'டிஜிட்டல்' கைது செய்து, 3.84 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், பொறியியல் கல்லுாரியின் முன்னாள் உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டையை சேர்ந்த, 74 வயதான பொறியாளரை, 'டிஜிட்டல்' கைது செய்து, 3.84 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக, சென்னை சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இவ்வழக்கில், கடந்தாண்டு டிச.,10ல், சென்னையை சேர்ந்த அப்ரோஸ், 31; திருவள்ளூரைச் சேர்ந்த லோகேஷ், 30; மாதங்கி ஹரீஷ்பாபு, 34 உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர்.
இவர்கள் அளித்த தகவலின்படி, சென்னையை சேர்ந்த பரசுராமன், 35 என்பவரை நேற்று கைது செய்தனர்.
இவர், சென்னையில் உள்ள மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லுாரியில் உதவி பேராசியராக பணியாற்றி உள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிவகாசி அருகே தீ பெட்டி ஆலையில் பயங்கர தீ; தொழிலாளிகள் உயிர் தப்பினர்!
-
தெலுங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து; தொழிலாளர்கள் 30 பேரை மீட்கும் பணி தீவிரம்
-
பாரதிதாசன் பல்கலை. பதவி உயர்வில் சமூக அநீதியை நீக்குங்கள்; அன்புமணி வலியுறுத்தல்
-
எந்த மொழிக்கும் நாம் எதிரி அல்ல; அப்பா செயலி வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
ஜி.எஸ்.டி., அதிகாரி, தாய், சகோதரி பலி; அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு
-
விமானத்தில் உடைந்த இருக்கை; மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கோரியது ஏர் இந்தியா
Advertisement
Advertisement