அன்னையின் 147வது பிறந்த நாள்

புதுச்சேரி: புதுச்சேரியில் அன்னையின் 147வது பிறந்த நாளையொட்டி, அரவிந்தர் மற்றும் அன்னையின் அறையில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அன்னை என்று அழைக்கப்படும் மிரா அல்பாஸா 1878ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பிறந்தார். அரவிந்தரின் யோக முறைகள் கவர்ந்ததால் இந்தியா வந்தார். அரவிந்தர் வாழ்ந்த புதுச்சேரியிலேயே அவர் தங்கி, அவரது ஆன்மிக, யோகப் பணிகளுக்கு உறுதுணையாக இருந்தார். அரவிந்தர் ஆசிரமம் மற்றும் ஆரோவில் என்ற சர்வதேச நகரை உருவாக்கினார்.
மேலும், அரவிந்தர் ஆசிரமத்தில் வாழ்ந்த அன்னை 1973ம் ஆண்டு நவ.17ம் தேதி மகா சமாதி அடைந்தார். அன்னையின்147வது பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் நேற்று காலை ஆசிரம வாசிகளில் கூட்டு தியானம் நடந்தது. அதை தொடர்ந்து, அன்னை மற்றும் அரவிந்தர் அறையை பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று தரிசனம் செய்தனர்.
மேலும், அன்னை உருவாக்கிய ஆரோவில் சர்வதேச நகரில் உள்ள மாத்ரி மந்திர் ஆம்பி தியேட்டரில் நேற்று காலை 5:00 மணிக்கு கூட்டு தியானம் நடந்தது. அதில், ஆரோவில் வாசிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கலந்து கொண்டனர்.
மேலும்
-
சிவகாசி அருகே தீ பெட்டி ஆலையில் பயங்கர தீ; தொழிலாளிகள் உயிர் தப்பினர்!
-
தெலுங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து; தொழிலாளர்கள் 30 பேரை மீட்கும் பணி தீவிரம்
-
பாரதிதாசன் பல்கலை. பதவி உயர்வில் சமூக அநீதியை நீக்குங்கள்; அன்புமணி வலியுறுத்தல்
-
எந்த மொழிக்கும் நாம் எதிரி அல்ல; அப்பா செயலி வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
ஜி.எஸ்.டி., அதிகாரி, தாய், சகோதரி பலி; அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு
-
விமானத்தில் உடைந்த இருக்கை; மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கோரியது ஏர் இந்தியா