ரயிலில் இருந்து விழுந்து ஸ்டேஷன் மாஸ்டர் பலி

1

மதுரை : கேரள மாநிலம் திருவனந்தபுரம் கீழரூரை சேர்ந்தவர் அனுசேகர் 31. மதுரைக் கோட்டத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிந்தார்.

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ரயில்வே ஸ்டேஷனில் நேற்று (பிப்.,20) காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை பணி ஒதுக்கப்பட்ட நிலையில் காலை 8:00 மணிக்கு ஸ்டேஷன் வந்த அவர், மதுரை வரை சென்றுவர திட்டமிட்டார்.


காலை 8:30 மணிக்கு செங்கோட்டை - ஈரோடு பாசஞ்சரில் ஏற முற்பட்ட போது ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே தவறி விழுந்தார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். விருதுநகர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர். இவருக்கு மனைவி, 4 மாத ஆண் குழந்தை உள்ளது.

Advertisement