மலைப்பாதையில்விபத்தில் சிக்கிய வேன்


மலைப்பாதையில்விபத்தில் சிக்கிய வேன்


சத்தியமங்கலம்:கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரிலிருந்து பல்லடத்துக்கு, ஐந்து ஆடுகளை ஏற்றிக்கொண்டு, ஒரு மாருதி ஆம்னி வேன் புறப்பட்டது. திம்பம் மலைப்பாதை வழியாக வந்தபோது, இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் பிரேக் பிடிக்காமல், சாலையோரத்தில் மோதி நின்றது.
வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் பல்லடத்தை சேர்ந்த அஷ்ரப் அலி, 51; அவருடன் வந்த சரவணன்,48, திண்டுக்கல்லை சேர்ந்த ராமு, 47, காயமடைந்தனர். மூவரும் மீட்கப்பட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisement