குட்டையில் சடலமாக கிடந்த ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்
சத்தியமங்கலம்: தாளவாடி அருகே உள்ள இக்கலுாரில் உள்ள ஒரு குட்டையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் கிடப்பதாக ஆசனுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். இதில் தாளவாடி, அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த நாகலட்சுமி, 64, ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் என்பது தெரிய வந்தது. திருமணம் ஆகாத இவர், அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று விட்டு இரண்டு, மூன்று நாட்கள் கழித்து வீட்டுக்கு வருவது வழக்கம்.
இந்த வகையில் சென்றவர், குட்டையில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். சத்தி அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பதவியை விட்டுக் கொடுக்கவும் தயார்; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு
-
32 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்; மீட்பு பணி தீவிரம்
-
ஆட்டோ வாடகை தராததால் பூ வியாபாரி அடித்துக்கொலை
-
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
-
தர்மபுரி தி.மு.க., - மா.செ., மாற்றம் தடங்கத்துக்கு தடங்கல் ஏற்பட்டது எப்படி?
-
சிறுமியை கர்ப்பமாக்கிய மத போதகருக்கு 'போக்சோ' மனைவி, மகனும் சிக்கினர்
Advertisement
Advertisement