ஓய்வூதியர் நல அமைப்பு மாநில ஆலோசனை கூட்டம்
ஈரோடு,: தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, அனைத்து ஓய்வூதியர் நல அமைப்பு மாநில ஆலோசனை கூட்டம் நேற்று ஈரோட்டில் நடந்தது.
பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு, ஓய்வூதியம், ஓய்வு கால பலன் கொடுக்காமல் இருப்பவர்களுக்கு தாமதமின்றி வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள ஊழியர்கள் அனைவருக்கும் இடைக்கால நிவாரணமாக மாதந்தோறும் தமிழக அரசு ரூ.10,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் முன்னாள் மாநில தலைவர் ராமமூர்த்தி, மாநில துணை பொது செயலாளர் குமரவேல், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில பொது செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் ராஜ்குமார், தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்க மாநில தலைவர் முருகானந்தம், தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க மாநில பொது செயலாளர் மகாலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
பதவியை விட்டுக் கொடுக்கவும் தயார்; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு
-
32 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்; மீட்பு பணி தீவிரம்
-
ஆட்டோ வாடகை தராததால் பூ வியாபாரி அடித்துக்கொலை
-
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
-
தர்மபுரி தி.மு.க., - மா.செ., மாற்றம் தடங்கத்துக்கு தடங்கல் ஏற்பட்டது எப்படி?
-
சிறுமியை கர்ப்பமாக்கிய மத போதகருக்கு 'போக்சோ' மனைவி, மகனும் சிக்கினர்