டில்லியின் புதிய சபாநாயகர் ஆனார் விஜேந்தர் குப்தா!

புதுடில்லி: புதுடில்லியின் சட்டசபையின் புதிய சபாநாயகராக பா.ஜ., மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான விஜேந்தர் குப்தா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
புதுடில்லி சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை பிடித்துள்ளது. யாரும் எதிர்பாராத விதமாக முதல் முறையாக எம்.எல்.ஏ.,வான ரேகா குப்தா முதல்வராக அறிவிக்கப்பட முறைப்படி அவரும் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
முதல்வர் பதவியை தொடர்ந்து சட்டசபையின் புதிய சபாநாயகர் யாராக இருப்பார் என்று எதிர்பார்ப்பு நிலவியது. இந் நிலையில், புதிய சபாநாயகராக பா.ஜ., மூத்த தலைவரும், ரோகிணி தொகுதியில் போட்டியிட்டு வென்றவருமான விஜேந்தர் குப்தா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
முதல்வர் ரேகா குப்தா அவரது பெயரை முன்மொழிய. அவையில் குரல் ஓட்டெடுப்பு மூலம் விஜேந்தர் குப்தா தேர்வாகி இருக்கிறார்.
அவரின் தேர்வுக்கு முதல்வர் ரேகா குப்தா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது;
தேசிய தலைநகருக்காக அவர் நிறைய பணி செய்துள்ளார். 3 முறை எம்.எல்.ஏ.,வாக தேர்வாகி உள்ளவர். இந்த அவைக்கு அவரின் அனுபவம் தேவையானதாக இருக்கும். அவரின் தலைமையின் கீழ் உறுப்பினர்கள் தங்கள் குரலை முன் வைப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
தர்மபுரி வெடிவிபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி
-
திருநெல்வேலி அருகே 5 பேர் கொலை: 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது கோர்ட்
-
இம்ரான்கான் கட்சி தலைவர்கள் வீடுகளில் சோதனை: 12 பேர் கைது
-
வெள்ளியங்கிரி மலையில் பறந்த த.வெ.க. கொடி!
-
உலகின் ஒவ்வொரு சமையலறையிலும் இந்திய விவசாயியின் பொருள் என்பதே எனது கனவு: பிரதமர் மோடி
-
தாக்கரே சகோதரர்கள் மீண்டும் இணையும் வாய்ப்பு; மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு