சூடானில் ராணுவ விமானம் விபத்து: 46 பேர் பலி

கர்தூம்: சூடானில் ராணுவ விமானம் கிளம்பும் போது நொறுங்கி விழுந்ததில் ராணுவ அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் என 46 பேர் பலியானார்கள்.
சூடானின் தலைநகரான கர்தூம் அருகே உள்ள ஓம்துர்மானில் உள்ள வாடி ஜெய்ட்வானா ராணுவ தளத்தில் இருந்து ராணுவ விமானம் ஒன்று கிளம்பியது. அப்போது திடீரென விபத்துக்குள்ளாகி நொறுங்கி விழுந்தது. இதில் 46 பேர் பலியானார்கள். மேலும் சிலர் காயமடைந்தனர்.
இந்த விபத்து காரணமாக, அப்பகுதியில் உள்ள ஏராளமான வீடுகள் சேதமடைந்ததுடன், அப்பகுதியில் மின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. இப்பகுதியில் அதிகமானோர் குடியிருந்து வருகின்றனர். தொழில்நட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக பாலகிருஷ்ணன் நியமனம்
-
இந்தியா உடனான உறவு வேலைவாய்ப்பை அதிகரிக்கும்: ஆஸி., பிரதமர் உறுதி
-
என்.ஐ.டி. பேராசிரியருக்கு பதவி உயர்வு: கேரள அரசியலில் சர்ச்சை!
-
பாயாசம் சுவையானது; விஜய் பேச்சு பற்றி மார்க்சிஸ்ட் கட்சி விமர்சனம்!
-
கோதாவரியில் குளிக்கச் சென்ற 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
-
தண்டனை பெற்ற அரசியல்வாதிகளுக்கு 6 ஆண்டு தடை போதுமானது: மத்திய அரசு பதில்
Advertisement
Advertisement