கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டங்கள்

பெருநாழி: தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் பெருநாழி முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முறையான காலமுறை ஊதியம் பெற்று வரும் ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவறை எழுத்தர்களுக்கான அரசின் சலுகைகளை ஊராட்சி செயலர்களுக்கும் விரிவுபடுத்த அரசாணை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கத்தின் சார்பில் மூன்று கட்ட போராட்டம் நடத்த மாநில மையத்தால் முடிவு செய்யப்பட்டது.
முதல் கட்டமாக மார்ச் 12ல் அனைத்து ஊராட்சி செயலர்களும் ஒரு நாள் மாநில அளவில் தற்செயல் விடுப்பு மற்றும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இரண்டாம் கட்டமாக ஏப்.,4ல் அனைத்து ஊராட்சி செயலர்கள் சென்னை ஊரக வளர்ச்சி ஆணையரகத்தில் பெருந்திரள் முறையீடு செய்கின்றனர்.
மூன்றாம் கட்டமாக ஏப்., 21 முதல் சென்னை ஊரக வளர்ச்சி துறை ஆணையரகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். போராட்டங்களில் தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் அறிவிப்பின் படி தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி செயலர்களும் கலந்து கொண்டு கோரிக்கை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
மேலும்
-
அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளதால் மக்கள் பாதிப்பு: நகராட்சிகளில் வளர்ச்சி பணிகளில் ஏற்பட்ட சுணக்கம்
-
சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கற்பூரம், பிரம்பு வைத்து பூஜை
-
36 வினாடிகளில் 100 மீட்டர்...! மழலையின் மலைக்க வைக்கும் சாதனை!
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளாவைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
-
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம்; சென்னையில் தமிழிசை கைது
-
பிரிட்டனில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி