தாராபுரம் சார் - பதிவாளர் அலுவலகம் திறப்பு
தாராபுரம்; தாராபுரத்தில் சார் பதிவாளர் அலுவலகத்தை, முதல்வர் ஸ்டாலின், காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில், சார் பதிவாளர் அலுவலகம், 1.85 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இதில், இ - ஸ்டாம்ப் அறை, அலுவலகம், உணவருந்தும் அறை, சரக்கு அறை உள்ளிட்ட தேவையான அனைத்து வசதிகளுடன், கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக திறந்து வைத்தார்.
புதிய அலுவலகத்தில் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி, குத்துவிளக்கேற்றி, முதல் பத்திரப்பதிவை வழங்கி, மரக்கன்று நட்டு வைத்தார். நிகழ்ச்சியில், தாராபுரம் ஆர்.டி.ஓ., பெலிக்ஸ் ராஜா, துணைப்பதிவு துறை தலைவர் பிரபாகர், மண்டல உதவி பதிவுத்துறை தலைவர் (சரகம்) ஸ்ரீ சித்ரா, மாவட்ட பதிவாளர்கள் ஜெயப்பிரகாஷ், முத்துக்குமார், தாராபுரம் சார் - பதிவாளர் உமா மகேஸ்வரி, தாராபுரம் நகராட்சி தலைவர் பாப்புக்கண்ணன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
மேலும்
-
தவறாக வீசப்பட்ட குண்டு தென் கொரியாவில் 15 பேர் காயம்
-
'இந்தியாவில் சித்ரவதை செய்வர்' மும்பை தாக்குதல் பயங்கரவாதி வாதம்
-
'ஒருவர் கூட மிஞ்சமாட்டீர்கள்' ஹமாசுக்கு டிரம்ப் எச்சரிக்கை
-
ஜெலட்டின் கடத்தல் வழக்கில்மேலும் மூன்று பேர் கைது
-
சேவை மையம் மூலம் நிலங்கள் அளவீடு விண்ணப்பிக்கும் புதிய வசதி துவக்கம்
-
காளியம்மன் கோவில் பண்டிகையைமுன்னிட்டு தேரோட்ட நிகழ்ச்சி