சங்கரா வித்யாலயா பள்ளி ஆண்டு விழா

கடலுார் : கடலுார் துறைமுகம் சங்கரா வித்யாலயா மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.

விழாவிற்கு பள்ளி நிறுவனர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் கஸ்துாரி சொக்கலிங்கம், பள்ளி தலைவர் சிவக்குமார், நிர்வாக செயல்அலுவலர் லட்சுமி சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.

வேல்விழி வரவேற்றார். பள்ளி ஒருங்கிணைப்பாளர் மலர்விழி ஆண்டறிக்கை வாசித்தார்.

கடலுார் சைபர்கிரைம் இன்ஸ்பெக்டர் கவிதா சிறப்புவிருந்தினராக பங்கேற்று, நுாறுசதவீத வருகை தந்த மாணவர்கள் மற்றும் பள்ளியில் நடந்த தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

மக்கள் தொடர்பு அலுவலர் சிவராஜ், சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் உதயகுமார், ஒருங்கிணைப்பாளர் மஹாசுப்ரியா, ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. திறனறி தேர்வில் சிறப்பு பெற்ற மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டில் பள்ளிக்கட்டண விலக்கு அளிக்கும் கடிதம் மாணவர்களின் பெற்றோர்க்கு பள்ளி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.

லதா நன்றி கூறினார்.

Advertisement