செயின் பறிப்பு ஆசாமி கைது

கடலுார் : கடலுார் திருப்பாதிரிப்புலியூரில், பெண்ணிடம் செயினை பறித்து சென்ற ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் கூத்தப்பாக்கத்தை சேர்ந்த விஜயா,51, என்பவர், கடந்த மாதம் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது கழுத்திலிருந்த ஒன்றரை சவரன் தங்க செயினை மர்ம நபர் பறித்து சென்றார். புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். விசாரணையில் சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த தினேஷ்பாபு,43, என்பவர் செயினை பறித்து சென்றது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், செயினை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சாம்பியன்ஸ் டிராபி பைனல்; இந்திய அணிக்கு 252 ரன்கள் இலக்கு
-
பீஹாரில் பா.ஜ.,வை வீழ்த்த நிதீஷ்குமாரை கூட்டணிக்கு அழைத்தோமா: தேஜஸ்வி மறுப்பு
-
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: ரோகித் சர்மா இப்படியும் ஒரு சாதனை!
-
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த 4 பேர் விஷவாயு தாக்கி பலி: மும்பையில் சோகம்
-
திருத்தணி காய்கறி சந்தைக்கு கருணாநிதி பெயரா; கண்டிக்கும் பா.ம.க.
-
ராமநாதபுரம் சரணாலயங்களில் குவியும் வெளிநாட்டு பறவைகள்; கணக்கெடுப்பில் தகவல்
Advertisement
Advertisement