கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 25 வழித்தடங்களில் மினி பஸ்
கள்ளக்குறிச்சி : மாவட்டத்தில், 25 வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்க விரைவில் அனுமதி வழங்கப்பட உள்ளது.
மாவட்டத்தில் புதிய மினி பஸ் இயக்க, பஸ் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், உளுந்துார்பேட்டையில் 15 வழித்தடங்களில் 44 பேரும், கள்ளக்குறிச்சியில் 17 வழித்தடங்களுக்கு 18 பேரும் விண்ணப்பித்திருந்தனர்.
அதனையொட்டி, கலெக்டர் பிரசாந்த் தலைமையில், குலுக்கல் முறையில் 25 வழித்தடங்களுக்கு உரிமையாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த மினி பஸ்களை இயக்குவதற்கான அனுமதி செயல்முறை ஆணைகள் விரைவில் வழங்கப்பட உள்ளதாக, கலெக்டர் தெரிவித்தார்.
கூட்டத்தில், வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், மினி பஸ் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சாம்பியன்ஸ் டிராபி பைனல்; இந்திய அணிக்கு 252 ரன்கள் இலக்கு
-
பீஹாரில் பா.ஜ.,வை வீழ்த்த நிதீஷ்குமாரை கூட்டணிக்கு அழைத்தோமா: தேஜஸ்வி மறுப்பு
-
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: ரோகித் சர்மா இப்படியும் ஒரு சாதனை!
-
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த 4 பேர் விஷவாயு தாக்கி பலி: மும்பையில் சோகம்
-
திருத்தணி காய்கறி சந்தைக்கு கருணாநிதி பெயரா; கண்டிக்கும் பா.ம.க.
-
ராமநாதபுரம் சரணாலயங்களில் குவியும் வெளிநாட்டு பறவைகள்; கணக்கெடுப்பில் தகவல்
Advertisement
Advertisement