கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

புதுச்சேரி: கத்தியை காட்டி, பொதுமக்களை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மேட்டுப்பாளையம் போலீசார், சண்முகாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, இந்திராநகரை சேர்ந்த தினகரன், 20; என்பவர் பொது இடத்தில், நின்று அவ்வழியாக செல்லும் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டினார்.

அவர் மீது, போலீசார் வழக்குப் பதிந்து தினகரனை, கைது செய்து கத்தியை பறிமுதல் செய்தனர்.

Advertisement