வேகவதி ஆற்று சிறுபால சுவரில் வளர்ந்துள்ள செடியால் ஆபத்து

திருப்பருத்திகுன்றம் : காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்திற்கும், திருப்பருத்திகுன்றத்திற்கும் இடையே செல்லும் வேகவதி ஆற்றின் குறுக்கே சிறுபாலம் கட்டப்பட் டுள்ளது. இப்பாலத்தின் வழியாக விப்பேடு, கீழ் கதிர்பூர், மேல்கதிர்பூர், விஷார் உள்ளிட்ட பகுதிக்கு சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்து நிறைந்த சிறுபாலத்தை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், சிறுபாலத்தின் சுவரில் அரசமர செடிகள் வளர்ந்துள்ளன. இச்செடிகளின் வேர்கள் வேரூன்றி வளர்வதால், நாளடைவில், சிறுபாலம் முழுதும் வலுவிழுக்கும் சூழல் உள்ளது.
எனவே, வேகவதி ஆற்று சிறுபாலத்தின் சுவரில் வளரும் அரச மரச் செடிகளை வேருடன் அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
3 பேர் கொல்லப்பட்ட நிலையில் 2 இளம் சிறார் மாயம்... ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு
-
மாஜி முதல்வர் பூபேஷ் பாகலுக்கு குறி: சத்தீஸ்கரில் 15 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
-
கல்வி நிதி விவகாரத்தில் கனிமொழி புகார்; பேசியதை வாபஸ் பெற்றார் மத்திய அமைச்சர்!
-
லலித் மோடியின் பாஸ்போர்ட் ரத்து; இந்தியாவின் கோரிக்கையை ஏற்பு
-
பள்ளி மாணவனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு; 3 மாணவர்கள் கைது
-
காஷ்மீருக்கு அம்ரித் பாரத் ரயில் சேவை; தமிழக சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்களுக்காக ரயில்வே திட்டம்
Advertisement
Advertisement