முத்து மாரியம்மன் கோவில் வரும் 17-ல் கும்பாபிஷேகம்
அன்னுார்: முத்துமாரியம்மன் கோவில், கும்பாபிஷேகம் வரும் 17ம் தேதி நடைபெறுகிறது.
ஆம்போதி ஊராட்சி, செல்லப்பம்பாளையம், சாலையூரில், மகா கணபதி, பாலமுருகன், மகா முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டது.
இதையடுத்து, கும்பாபிஷேக விழா வேள்வி பூஜை உடன் வருகிற 16ம் தேதி துவங்குகிறது. காலையில் முடுக்கன் துறை, பவானி ஆற்றுக்கு சென்று புனித நீர் எடுத்து வருதல், மாலையில் முதல் கால வேள்வி பூஜை, இரவு எண் வகை மருந்து சாத்துதல் நடக்கிறது.
வரும் 17ம் தேதி காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜை நடக்கிறது.
காலை 9:30 மணிக்கு கணபதி, பாலமுருகன் மற்றும் முத்துமாரியம்மனுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஸ்ரீ ஜெடைய சுவாமி கோவில் குண்டம் பல்வேறு கிராம மக்கள் பங்கேற்று பிரார்த்தனை
-
'சரக்கு' வாங்க வேண்டியது... ரோட்டிலேயே குடிக்க வேண்டியது! அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் பொதுமக்கள்
-
திபெத்தியர்கள் அமைதி பேரணி
-
மரத்துண்டுகளை கடத்திய நபர் கைது
-
'பிடிவாரன்ட்' கணவனை பிடிக்க தாமதம்; சத்தி போலீசை கண்டித்து பெண் ஆவேசம்
-
அணைகள் நீர்மட்டம்
Advertisement
Advertisement