சாலையில் யானை: போக்குவரத்து பாதிப்பு

பந்தலுார் : பந்தலுார் அருகே தேவகிரி எந்த இடத்தில், சாலை ஓரம் நின்ற யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தேவாலா, தேவகிரி, பந்தலுார் வழியாக, தமிழக எல்லையோர கிராமங்கள் மற்றும் வயநாடு மற்றும் கோழிக்கோடு பகுதிகளுக்கு செல்லும் சாலை அமைந்துள்ளது. அதில், தேவகிரி என்ற இடத்தில் சாலை ஓரத்தில், பகல் நேரங்களில் யானை நின்று, சாலையில் வரும் வாகனங்களை துரத்துவதால் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
கடந்த சில வாரங்களுக்கு முன், காரை உருட்டி விட்டதில், காரில் பயணம் செய்தவர் உயிர் தப்பினார். எனவே, இந்த யானையை கண்காணித்து, அடர்த்தியான வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லீலாவதி மருத்துவமனையில் ரூ.1,200 கோடி மோசடி: முன்னாள் நிர்வாகிகள் மீது அறக்கட்டளை குற்றச்சாட்டு
-
தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் பயனடையும்: ராஜ்நாத் சிங்
-
கெஜ்ரிவாலுக்கு சிக்கல்: வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு டில்லி கோர்ட் உத்தரவு
-
இந்தியா -மொரீசியஸ் உறவுகள் வலுவானவை: பிரதமர் மோடி பெருமிதம்
-
தேர்தல் நடைமுறையை வலுப்படுத்த கூட்டம்: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் அழைப்பு
-
ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கையெழுத்துடன் ரூ.100, ரூ.200 நோட்டு வெளியிட முடிவு
Advertisement
Advertisement