குப்பையை திருப்பி அனுப்பிய மக்கள்

பல்லடம்; கோடங்கிபாளையம் ஊராட்சி பகுதிகளில், அடிக்கடி குப்பைகள் கழிவுகள் கொட்டப்படுவது வாடிக்கையாக உள்ளது.
கோழி இறைச்சி கழிவுகள், அழுகிய முட்டைகள், காய்கறி கழிவுகள் உள்ளிட்டவை கொட்டப்படுவதால், துர்நாற்றத்துடன், நோய் தொற்று பாதிப்பும் ஏற்படுகிறது.
நேற்று முன்தினம், கோடங்கிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட காரணம்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில், வாகனம் ஒன்றில் இருந்து குப்பைகள், கழிவுகள் பொது இடத்தில் கொட்டப்பட்டு வந்தன. இப்பகுதி பொதுமக்கள் வாகனத்தை தடுத்து நிறுத்தி சிறைப்பிடித்தனர். விசாரித்ததில், அது, கருமத்தம்பட்டி நகராட்சிக்கு சொந்தமான வாகனம் என்பதும், குப்பைகள், கழிவுகளை கொட்டியதும் தெரிந்தது. குப்பைகளை உடனடியாக எடுத்துச் செல்லுமாறு பொதுமக்கள் வலியுறுத்தியதால், குப்பைகள் கழிவுகள் மீண்டும் அதே வாகனத்தில் ஏற்றி எடுத்துச் செல்லப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நெரூரில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம்; ஐகோர்ட் மதுரை கிளை தடை உத்தரவு
-
விடுதி உணவில் பிளேடு, புழு.. உஸ்மானிய பல்கலை மாணவர்கள் போராட்டம்
-
எல்லாவற்றையும் இழக்க நேரிடும்; அமெரிக்காவுக்கு ஐ.நா., மறைமுக எச்சரிக்கை
-
டில்லியில் பிரிட்டன் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை; இருவர் கைது
-
வயது முதிர்ந்த விவசாயத் தம்பதி படுகொலை; அவிநாசி அருகே பயங்கரம்
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்கியது!
Advertisement
Advertisement