காட்டு மாடு தாக்கி வனக்காப்பாளர் பலி

பெ.நா.பாளையம்; காட்டு மாடு தாக்கி வனக்காப்பாளர் உயிரிழந்தார்.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட தோலம் பாளையம் பகுதியில் கடந்த, 10ம் தேதி குடியிருப்பு பகுதி அருகே சுற்றிக் கொண்டிருந்த காட்டு மாட்டை பெரியநாயக்கன்பாளையம் வன காப்பாளர் அசோக் குமார்,45, விரட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக காட்டு மாடு தாக்கியதில் வயிற்றுப் பகுதியில் அசோக்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
சீலியூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையும், அதைத் தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. நேற்று காலை, 9:00 மணிக்கு உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நெரூரில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம்; ஐகோர்ட் மதுரை கிளை தடை உத்தரவு
-
விடுதி உணவில் பிளேடு, புழு.. உஸ்மானிய பல்கலை மாணவர்கள் போராட்டம்
-
எல்லாவற்றையும் இழக்க நேரிடும்; அமெரிக்காவுக்கு ஐ.நா., மறைமுக எச்சரிக்கை
-
டில்லியில் பிரிட்டன் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை; இருவர் கைது
-
வயது முதிர்ந்த விவசாயத் தம்பதி படுகொலை; அவிநாசி அருகே பயங்கரம்
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்கியது!
Advertisement
Advertisement