அத்திவாக்கத்தில் 267 பயனாளிகளுக்கு ரூ.5.90 கோடியில் நலத் திட்ட உதவிகள்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, அத்திவாக்கம் கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது.

இம்முகாமிற்கு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமை வகித்தார். காஞ்சிபுரம் தி.மு.க.,- - எம்.பி., செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இந்த, மக்கள் தொடர்பு திட்ட முகாமில், 5.90 கோடி ரூபாய் செலவில், 267 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை, கலெக்டர், எம்.பி., ஆகிய இருவரும் வழங்கினர்.

வாலாஜாபாத் தி.மு.க.,- ஒன்றியக் குழு சேர்மன் தேவேந்திரன் மற்றும் வருவாய், குடிமை பொருள், தோட்டக்கலை, வேளாண் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement